search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளிருப்பு போராட்டம்"

    • சமயநல்லூர் மின் கோட்ட அலுவலகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
    • 10 கிளை அலுவலகங்களில் வசூல் மற்றும் களப்பணி மற்றும் அவசரப்பணிகள் செய்வதில்லை.

    வாடிப்பட்டி

    சமயநல்லூர் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் அலங்காநல்லூர் மின்பாதை ஆய்வாளர் ராமநாதன், கேங்மேன் சுரேஷ் ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாநில பொறுப்பாளர் அறிவழகன் தலைமையில் தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், தொழிலாளர் சம்மேளன சங்கம், அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்புச் சங்கம், அட்டைப்பெட்டி பிரிவு அலுவலர்கள் சங்கம் அ.தி.மு.க. தொழிற்சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதன் காரணமாக அலங்காநல்லூர் துணை மின் நிலையத்திற்கு மதியம் 1 மணிக்கு செல்ல வேண்டிய அலுவலர்கள் செல்ல மாட்டார்கள் என்றும், மாலை 5 மணிக்கு அலங்காநல்லூர் துணை மின் நிலையம் பூட்டப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். சமயநல்லூர் கோட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி, சோழவந்தான், அய்யங்கோட்டை, அலங்காநல்லூர் உள்ளிட்ட 10 கிளை அலுவலகங்களில் வசூல் மற்றும் களப்பணி மற்றும் அவசரப் பணிகள் செய்வதில்லை என்றும் தெரிவித்தனர்.

    • கொரோனா பாதிப்பு, தொழில் நஷ்டம் உள்ளிட்ட காரணங்களால், பாக்கி தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
    • 7 நாட்களுக்கு கால அவகாசம் வழங்குவதாக அறிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் வசிக்கும் ஒருவர், அவரது வீட்டை விரிவாக்கம் செய்வதற்காக,தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2019 ம் ஆண்டு ரூ.28லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் ரூ.13 லட்சம் திருப்பி செலுத்தியுள்ளார். இதற்கிடையே கொரோனா பாதிப்பு, தொழில் நஷ்டம் உள்ளிட்ட காரணங்களால், பாக்கி தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடனை திருப்பி செலுத்த அவர் நிதி நிறுவனத்தில் கால அவகாசம் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 31 வரை அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், கெடு தேதி முடிந்ததால் நிதி நிறுவனத்தினர், நீதிமன்ற உத்தரவு பெற்று அவரது வீட்டை ஜப்தி செய்வதற்காக சம்பவத்தன்று போலீசார் உடன் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு உள்பக்கமாக கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிதி நிறுவனத்தார், மேலும் 7 நாட்களுக்கு கால அவகாசம் வழங்குவதாக அறிவித்தனர். இதையடுத்து உள்ளிருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • சிதம்பரத்தில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.
    • உள்ளிருப்பு போராட்டம் தொடர்பாக சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டன. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.

    இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்றத்தில் நாளை இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து நாளை சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வேண்டும். ராகுல் காந்திக்கு ஆதரவாக சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் பேசவேண்டும். சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பூதலூர் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
    • தீர்மான புத்தகத்தை காண்பிக்க வேண்டும் எனகூறி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியக்கு ழுவின் சாதாரண கூட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றிய அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் உறுப்பினர்கள் கலந்துெகாண்டு பேசினர்.

    கேசவமூர்த்தி (தி.மு.க.):

    அகரப்பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் மின்விளக்கு வசதி வேண்டும்.

    மயில்சாமி (தி.மு.க.):

    வேப்பங்குடி ஆனந்த காவேரி வாய்க்காலில் மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தர வேண்டும். மனையேரிப்பட்டி கடம்பன்குடி சாலையை சீரமைத்து தர வேண்டும்.

    சுப்பிரமணியன் (அ.ம.மு.க.):

    சானூரப்பட்டியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தில் வெளிப்ப டைத்தன்மை இல்லாத சூழ்நிலை உள்ளது.

    தீர்மான புத்தகத்தை எப்போதும் காண்பிப்பதில்லை. தீர்மான புத்தகத்தை உறுப்பினர்களுக்கு வெளிப்படையாக காண்பிக்க வேண்டும்.

    வெங்கடேசன் (பா.ஜ.க.):

    சோளகம்பட்டி ெரயில் நிலைய இணைப்பு பாதை குறித்து தீர்மானம் நிறைவேற்றி தாருங்கள்.

    கென்னடி (பா.ஜ.க.):

    திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ெரயிலை பூதலூரில் நிறுத்த வேண்டும்.

    மதுபாலா (அ.தி.மு.க.): சுரக்குடிபட்டியில் பல மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சீர்செய் தர வேண்டும்.

    ரம்யா (தி.மு.க):

    இளங்காடு கிராமத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைத்து தர வேண்டும்.

    தலைவர்:

    வேப்பங்குடி ஆனந்த காவேரி பாலம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது.

    பூதலூர் ஒன்றியத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான புத்தகத்தை அதிகாரிகள் படிக்கலாம் காண்பிக்க வேண்டியதில்லை.

    இவ்வாறு கூறி கூட்டத்தை முடித்து விட்டு தனது அறைக்கு சென்றார்.

    அப்போது தீர்மான புத்தகத்தை காண்பிக்க வேண்டும் எனக்கோரி பா.ஜ.க. மற்றும் அ.ம.மு.க. உறுப்பினர்கள் அவைக்கூடத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் போராட்டம் நடத்திவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • அமைதி கமிட்டி கூட்டம் அமைப்பதாக உறுதி

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சனகிரி மலையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவன் கோயில் உள்ளது.

    இந்த கோவிலில் லாலாப்பேட்டையை சேர்ந்தவர்கள் நிர்வாகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முகுந்தராயபுரம் ஊராட்சிமன்ற தலைவர் காஞ்சனகிரி மலைக்கோயில் எங்கள் பஞ்சாயத்திற்கு உட்பட்டது எனவும் இனி நாங்கள் தான் நிர்வாக செய்வோம் என தெரிவித்தாக லாலாப்பேட்டை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்து நேற்று லாலாப்பேட்டை ஊராட்சி பொது மக்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் முகுந்தராயபுரம் ஊராட்சிமன்ற தலைவரை கண்டித்து ஆர்பாட்டம் மற்றும் கடையடைப்பு செய்தனர்.

    இதனையடுத்து காஞ்சனகிரி மலையடிவாரத்தில் லாலாப்பேட்டை பொதுமக்கள் ஒன்றுகூடி இன்று கலெக்டரிடம் மனு கொடுப்பதாக முடிவு செய்து பின்னர் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் 2-வது நாளாக லாலாப்பேட்டை கிராம பொதுமக்கள் லாலாப்பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வினோத்குமார், தாசில்தார் நடராஜன், டி.எஸ்.பிக்கள் பிரபு, ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ஆகியோர் லாலாப்பேட்டை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்துனர்.

    இதனை அனைத்தும் கேட்ட கோட்டாட்சியர் வினோத் குமார் பேசியதாவது:-நீங்கள் அனைவரும் தெரிவித்த குற்றச்சாடுகளுக்கு அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் பீஸ் கமிட்டி கூட்டம் அமைத்து இதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

    மேலும் லாலாப்பேட்டை ஊராட்சியை மறுவரையறை செய்ய பொதுமக்கள் நீங்கள் மனுக்களாக கொடுங்கள் அது அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
    • அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மற்றும் தொடக்க வேளாண்மை அலுவலக அதிகாரிகளிடத்தில் பேச்சுவார்த்தை செய்ததில் உடன்பாடு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இதுவரை கொடுத்துள்ள 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர் விண்ணப்பத்தில் ஒருசிலரை மட்டும் சேர்த்துவிட்டு ரசீது போடப்பட்டது.

    மேலும் ரசீது போடாத மீதமுள்ள உறுப்பினர் சேர்க்கையை முழுவதும் முடிக்காமல் காலம் தாழ்த்துவது கண்டித்து கூட்டுறவு சங்க செயலாளர், முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

    பின்னர் பேச்சு வார்த்தையில் அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் தொடக்க வேளாண்மை அலுவலக அதிகாரிகளிடத்தில் பேச்சுவார்த்தை செய்ததில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து உள்ளிருப்பு போராட்டம் கைவி டப்பட்டது.

    இதில் மாநிலத் துணைத் தலைவர் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் கோபால், சம்பத், ஒன்றிய செயலாளர் நடராஜ், மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய பொருளாளர் ராஜி, மாவட்ட துணைச்செ யலாளர் செங்கோட்டையன், மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர் சரவணன், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பில் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
    • 23-ந் தேதிக்குள் நிலுவை தொகை படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

    வால்பாறை,

    வால்பாறை நகராட்சியில் பதிவு செய்து வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு, கடந்த, 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பில் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

    2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொகை வழங்கப்படா ததால் , அதிருப்தி அடைந்த ஒப்பந்ததாரர்கள் நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில் திடீர் என்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி, கமிஷனர் பாலு, பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 23-ந் தேதிக்குள் நிலுவை தொகை படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்க ச்சாவடி பணியாளர்கள் 28பேர் பணி நீக்கம், ஆள் குறைப்பு செய்யப்பட்டனர்.
    • சுங்க சாவடி அனைத்து ஊழியர்கள் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை சுங்க ச்சாவடி பணியாளர்கள் 28பேர் பணி நீக்கம், ஆள் குறைப்பு செய்யப்பட்டதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட சுங்க சாவடி அனைத்து ஊழியர்கள் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை-திருச்சி செல்லும் வாக னங்கள் அனைத்தும் பணம் வழங்காமல் சுதந்திரமாக செல்கிறது.

    அதோடு மட்டும ல்லாமல் ஊழியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் இருப்பதால் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமை யில் 50-க்கும் போலீசார் மேற்பட்டோர் குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுங்கச்சாவடி பணியா ளர்கள் அனைவரும் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கூட்டத்தில் தி.மு.க, பா.ம.க மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்.
    • 53 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நகல் வழங்கப்பட்டன.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சி கூட்டம் நேற்று நடை பெற்றது. கூட்டத்தில் தி.மு.க, பா.ம.க மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் 53 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நகல் வழங்கப்பட்டன. முறையாக அனைத்து வார்டுகளிலும் 53 தீர்மா னங்களில் உள்ள பணிகள் நடைபெறவில்லை என்று கூறி துணைத் தலைவர் ராஜா உட்பட 5 தி.மு.க உறுப்பினர்கள், பா.ம.க-வைச் சேர்ந்த ஒரு உறுப்பி னர் மற்றும் 3 சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 9 உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

    எங்களது வார்டுகளில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் பணி நடைபெற்றதாக நீங்கள் இந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொடுத்துள்ளீர்கள். நாங்கள் இதனை வன்மை யாக கண்டிக்கின்றோம் என கூறினர்.

    பேரூராட்சி தலைவர் லட்சுமிமூர்த்தி, செயல் அலுவலர் (பொறுப்பு) சரவணன் இருவரும் உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காமல் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து வேலூர் பேரூராட்சி 9 வார்டு உறுப்பினர்கள் மன்ற கூட்டரங்கில் தொடர்ந்து பகல் 12 மணி முதல் இரவு 9.45 மணி வரை சுமார்10மணிநேரத்திற்கு மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம் சேலம் மண்டல பேரூ ராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள், செயல் அலுவ லர் (பொறுப்பு) சரவணன் ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பெரும்பான்மையான ஆதரவு இல்லாததால் கூட்டத்தில் தீர்மா னங்கள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை என கூறியதையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி கூறுகையில், நான் பெண் தலைவர் என்பதால் கவுன்சி லர்கள் யாரும் என்னை மதிப்பதில்லை. பேரூராட்சி பகுதிகளில் இதுவரை எந்த வேலையும் நடைபெற விடவில்லை.அதனால் வேலையே நடைபெறாமல் எப்படி ஊழல் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.

    கவுன்சிலர்கள் போராட்டம் காரணமாக வேலூர்பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 11 வது நாளாக ஈடுபட்டுள்ளார்.
    • தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்படும் கல்குவாரி நிர்வாகத்தை கண்டித்து செந்தில்குமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 11 வது நாளாக ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பல்லடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்றுகாலையும் போராட்டம் நீடித்தது. அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, போளூர், சாலையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு சேத்துப்பட்டு வட்ட செயலாளர் ஜான்சன், தலைமை தாங்கினார் வட்டத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுராமன், ஆகிய முன்னிலை வகித்தனர்.

    கடந்த 24-ந்தேதி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேத்துப்பட்டு, தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

    மேலும் 7 அம்ச கோரிக்கைகளை எந்த முடிவும் எடுக்காததை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் தாலுக்கா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 10 நாட்களுக்குள் உங்களுக்கு வழங்க வேண்டிய ஜமாபந்தி நிலுவை தொகையை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

    பின்னர் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலந்து சென்றனர் இதில் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் கொள்முதல் செய்யப்படாமல் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் தேக்கம் அடைந்தது.
    • காலத்திற்கேற்ப தறிகளை நவீனப்படுத்தி புதிதாக ஆட்கள் நியமித்து கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி பாலமேட்டு புதூரில் 1982-ம் ஆண்டில் தமிழ்நாடு பஞ்சாலை க்கழகத்தின் மூலம் விசைத்தறி கூடம் அமைக்கப்பட்டது.

    இங்கு பள்ளி மாண வர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் சீருடைகள். போலீஸ் சீரு டைகள், இலவச வேட்டி, சேலைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது.

    தறி ஓட்டுபவர்கள், வைண்டிங்மேன், கிளீனர், ஜாப்பர், ஹெல்ப்பர், தோட்டக்காரர் என 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

    குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. தினமும் 3 சிப்ட் இயங்கி வந்தநிலையில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் கொள்முதல் செய்யப்படாமல் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் தேக்கம் அடைந்தது.

    இதனால் கடந்த 20 ஆண்டுகள் முன்பு 44 தறிகள் கொண்ட ஒரு யூனிட் நிறுத்தப்பட்டு, தொழி லாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டு 48 தறிகளுடன் மட்டுமே இயங்கி வந்தது.

    புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட வில்லை. சம்பளம் பற்றாக்குறை யால் தொழி லாளர்கள் பலர் வெளியேறி விட்டனர்.

    இந்நிலையில் வெறும் 24 தறிகள் மட்டுமே இயங்கி வந்தது. ஆனால் தற்போது இயங்கும் தறிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைந்து உள்ளது. இதை மட்டுமே நம்பி சுமார் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 20ஆக குறைந்து விட்டது.

    தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு தினமும் 430 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்க ப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சம்பள ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் போடப்படவில்லை.

    இந்நிலையில் நிர்வாக த்தின் சார்பில் அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் தற்பொழுது தமிழ்நாடு பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான சிவகிரி விசைத்தறிக்கூடம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 கோடியே 73 லட்சம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

    நடப்பு ஆண்டில் மாதம் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விசைத்தறிக்கூடம் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த விசைகூடம் தொடர்ந்து லாபத்தில் இயங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் காலத்திற்கேற்ப தறிகளை நவீனப்படுத்தி புதிதாக ஆட்கள் நியமித்து கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். நிறுவனத்தை லாபத்தில் இயக்க ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும்.

    அந்த குழுவில் தொழிலாளர்களை முன் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    ×